Monday, January 31, 2011

இறப்பு...



















ஆறும் அறியா,
அறுபதும் அறியா,

மண்டியிட்டு மன்றாடியும்
மலைபோல் கடமையில்...

எக்காலத்திலும் வெற்றியை
மட்டும் தனக்கு கொண்டு
தோல்வியும்,இழப்பையும்
தர்மம் செய்யும்
வள்ளலாய்...

ஈராயிரம் ஆண்டுகள்
முதுமை,
ஆனாலும்
தினம் தினம்
இறக்கமற்ற கொடூர
அவதாரத்தோடு...

யார் அனுமதியின்றி
உடலயும் உயிரயும்
பாகப்பிரிவினை
செய்வதில்
திறமைசாலி!!!

கொடுயவர்களோடு
நல்லவர்களையும்
விழுங்குபவனாய்...
அதில் சிலருக்கு
தீபாவளியாக...
சிலருக்கு
அமாவாசை இருளாக...!!!

Friday, January 28, 2011

..ஞாபகம்!!!
















இயற்கையவளை 
இரசித்தேன்...
உன்னையும் 
மறவாமல்.....!


Thursday, January 27, 2011

குழப்பமில்லை!!!













கல்லெறிந்த
நீராக
இருந்தவள்தான்...
எப்போதோ
தெளிந்த நீராகிவிட்டேன்!

குழப்பமுமல்ல,
தயக்கமுமல்ல,

நீலவானில்
வெண்ணிலவாய்
நான்,

தொலைதூரத்திலிருந்து...
என் ஒற்றை
வார்த்தைக்காக
நீயும்..........

உன் ஒற்றை
வார்த்தைக்காக
நானும்....................

காதலுக்காக அல்ல
என்றென்றும்
நண்கர்களாய்...

குழப்பமில்லாமல் !!!

Wednesday, January 26, 2011

ஆயுள்வரை!!!













எழுத சொற்களின்றி
வார்த்தைகளைத் தொலைத்துவிட்டேன்...
என்னெவென்று எழுத,
ஏதென்று சொல்ல...

காரணங்கள் தெரியாமல்
எட்டு திக்கும்
தேடுகிறேன்...

புரியாத புதிராய் 
நானானேன்...
தெளிவாக தெளிவில்லாத பேதையானேன்!
நீ ஒருவனே காரணம்!!

மௌனத்தைக் கலைக்க 
நாடகம்...
வெற்றியோ,
தோல்வியோ,
நம்மிருவருக்கும்தான்...!

இனி ஒரு திங்கள்வரை...
பார்க்கலாம்...
நினைவில்கொள்,
நெருக்கத்தைவிட 
தள்ளியுருப்பதே சிக்கல்தான்
என் நினைவில் நீயும்,
உன் நினைவில் நானும்...

இருப்பினும் 
வேண்டும் 
உன் நட்பு 
என் ஆயுள்வரை!!!