வார்த்தைகளைத் தொலைத்துவிட்டேன்...
என்னெவென்று எழுத,
ஏதென்று சொல்ல...
காரணங்கள் தெரியாமல்
எட்டு திக்கும்
தேடுகிறேன்...
புரியாத புதிராய்
நானானேன்...
தெளிவாக தெளிவில்லாத பேதையானேன்!
நீ ஒருவனே காரணம்!!
மௌனத்தைக் கலைக்க
நாடகம்...
வெற்றியோ,
தோல்வியோ,
தோல்வியோ,
நம்மிருவருக்கும்தான்...!
இனி ஒரு திங்கள்வரை...
பார்க்கலாம்...
நினைவில்கொள்,
நெருக்கத்தைவிட
தள்ளியுருப்பதே சிக்கல்தான்
என் நினைவில் நீயும்,
உன் நினைவில் நானும்...
இருப்பினும்
வேண்டும்
உன் நட்பு
என் ஆயுள்வரை!!!

No comments:
Post a Comment