Thursday, December 3, 2015

Infinity...

பௌர்ணமியைத் தேடி
வெண்முகிலின் தேடல், அமாவாசையின்போது...
தேடல் தொடரும்,
கருநீல வானத்தில் முடிவில்லாதத் தேடல் இன்னமும் தொடரும்...
அமாவாசையிலும் முழு நிலவை நம்பி... 
தினம் தினம் முழு நிலவைத்தேடி...

Monday, June 27, 2011

அறியாமை?????


தொலைவில்
இருக்கும் நிலவுகூட
உனக்கு
அருகில் தெரிந்தும்
என்னுள்
நானாகவே மாறிய
உன் நினைவுகள்
தெரியாமட்போனதென்னவோ
வியப்புதான்.....

Tuesday, June 7, 2011

இனிமையான தனிப்பு...


உன் தனிமையும்
நானாயிருக்க
தவமிருந்தேன்,
பலனாயிற்று...

இங்கு நீயில்லா
என் பொழுது
தனித்து தனிமையிலென
கலங்கிய வேலையில்...


இதமாய் அணைத்து 
நெற்றியில் 
இதழ் பதித்தன 
உன் நினைவுகள்.....


தலைவனோடும்
அவன் நேசத்தோடும்
தனிமையில்
லயித்திருந்த நான்
இனிவரும் பொழுதுகளில்
அதே நேசத்தோடு,
நாங்கள் மட்டும் 

எங்கள் இனிமையான தனிமையில்............

Thursday, June 2, 2011

தாயுமாகிறேன்...!!!















கண்ணிமைக்கும்
நொடிகளைக் கூட
தவிர்க்கிறேன்...
நீ
என் பார்வையிலிருந்து
விடுபடாமலிருக்க...
உள் இழுக்கும்
சுவாசமாய்
நீயாயிருக்க,
உருவம் மட்டும்
நானாகிறேன்!!!
என் உயிரே,
உன்னை
சுமப்பதினால் நான்
தாயுமாகிறேன்...
உன்னோடு வாழ்வதற்கு
முன்பே...!!!

Tuesday, May 10, 2011

நீயே!!!


















காதல் உறவுக்குமேல்
உறிமையானபின்
யோசனைக்கென்னெ வேலை?

அன்று.
பட படத்த இதழ்களே
இன்று,
உன்னை திக்கு முக்காட
வைத்தது...

காரணி நானல்ல!!!

என் வெட்கங்களே
வெட்கப்பட்டு
திசையறியா
ஓடி ஒளிந்து
போயிற்றே!!!

காரணி நானல்ல!!!

வேகத்தின் தித்திப்புக் கண்டு
என் மழையில் நீயும்,
உன் மழையில் நானும்,
நம் மழையில் நாமும்...

அடடா...
நினைக்கையில்
குடைக்குள் என்றும்
நம் காதல் மழை
என் அன்பே...!!!

Saturday, April 23, 2011

வசந்தம்!!!













வேனிற்காலம் இளவேனிலாய்
மாறியக்
காண்புக்கண்டேன்!!!
இளவேனிலிலும் எளிதாய்
உதிர்தலைக் கண்டேன்!!!
எனினும்,
தலைவன்
வருகையால்
பருவம் ஒன்றே!!!
வசந்தம்...வசந்தமே!!!

Thursday, April 21, 2011

கனா...












எங்கோ ஒரு மழைத்துளி
எனக்கென சிந்துவதுபோல்
ஒரு பிரம்மை...

எங்கோ ஒரு தூரல்
 எனக்காகவே பூமியைத்
தொட்டு மடிவதாய்
ஒரு பிரம்மை...

இன்னும், எங்கோ
ஓர் இதயம் எனக்காய்
துடிப்பதாய்
ஒரு பிரம்மை...

எதோ ஒரு நிழல்
என்னை பின் தொடர்ந்து
வருவதாய் ஒரு கனா...

இன்னனும்,
நான் மட்டும் நிஜத்தில்...
அதே பிரம்மையோடு...


விழித்து எழுந்தேன்
அந்த நிஜமும்
வெரும் கனாவோடு!!!