எங்கோ ஒரு மழைத்துளி
எனக்கென சிந்துவதுபோல்
ஒரு பிரம்மை...
எங்கோ ஒரு தூரல்
எனக்காகவே பூமியைத்
தொட்டு மடிவதாய்
ஒரு பிரம்மை...
இன்னும், எங்கோ
ஓர் இதயம் எனக்காய்
துடிப்பதாய்
ஒரு பிரம்மை...
எதோ ஒரு நிழல்
என்னை பின் தொடர்ந்து
வருவதாய் ஒரு கனா...
இன்னனும்,
நான் மட்டும் நிஜத்தில்...
அதே பிரம்மையோடு...
விழித்து எழுந்தேன்
அந்த நிஜமும்
வெரும் கனாவோடு!!!

No comments:
Post a Comment