Monday, June 27, 2011

அறியாமை?????


தொலைவில்
இருக்கும் நிலவுகூட
உனக்கு
அருகில் தெரிந்தும்
என்னுள்
நானாகவே மாறிய
உன் நினைவுகள்
தெரியாமட்போனதென்னவோ
வியப்புதான்.....

Tuesday, June 7, 2011

இனிமையான தனிப்பு...


உன் தனிமையும்
நானாயிருக்க
தவமிருந்தேன்,
பலனாயிற்று...

இங்கு நீயில்லா
என் பொழுது
தனித்து தனிமையிலென
கலங்கிய வேலையில்...


இதமாய் அணைத்து 
நெற்றியில் 
இதழ் பதித்தன 
உன் நினைவுகள்.....


தலைவனோடும்
அவன் நேசத்தோடும்
தனிமையில்
லயித்திருந்த நான்
இனிவரும் பொழுதுகளில்
அதே நேசத்தோடு,
நாங்கள் மட்டும் 

எங்கள் இனிமையான தனிமையில்............

Thursday, June 2, 2011

தாயுமாகிறேன்...!!!















கண்ணிமைக்கும்
நொடிகளைக் கூட
தவிர்க்கிறேன்...
நீ
என் பார்வையிலிருந்து
விடுபடாமலிருக்க...
உள் இழுக்கும்
சுவாசமாய்
நீயாயிருக்க,
உருவம் மட்டும்
நானாகிறேன்!!!
என் உயிரே,
உன்னை
சுமப்பதினால் நான்
தாயுமாகிறேன்...
உன்னோடு வாழ்வதற்கு
முன்பே...!!!