உன் தனிமையும்
நானாயிருக்க
தவமிருந்தேன்,
பலனாயிற்று...
இங்கு நீயில்லா
என் பொழுது
தனித்து தனிமையிலென
கலங்கிய வேலையில்...
இதமாய் அணைத்து
நெற்றியில்
இதழ் பதித்தன
உன் நினைவுகள்.....
தலைவனோடும்
அவன் நேசத்தோடும்
தனிமையில்
லயித்திருந்த நான்
இனிவரும் பொழுதுகளில்
அதே நேசத்தோடு,
நாங்கள் மட்டும்
எங்கள் இனிமையான தனிமையில்............

No comments:
Post a Comment