எத்தனை கர்வம்
உனக்குள்?
எட்டா உயரத்தில்
ஊற்றாய் இருப்பதாலா? ...
சின்னஞ்சிறு
நுண்ணுயிர்களுக்குள்ளும்
வண்ணங்களாய் இருப்பதாலா?...
படைப்பாலியில்லா
படைப்பென்றே
பெருமிதக்கண்ணியே,
நீலவானமாய் கடலோடு
காதல் உண்டோ?...
மிகையில்லா அழகால்
குறையாத கர்வம்
கொண்டாளே,
உன்னழகு மேன்மையாவதே
என்னவன் உன்னை ரசிப்பதால்தான்<3<3<3










