Saturday, February 12, 2011

துர்ரதிஷ்டசாலிதான்!!!

சொல்ல முடியா
வார்த்தைகள் கோடி,
பேச மொழியில்லா
ஊமையப்போல்..!!!

உன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு
தயங்கிய கண்ணீர்கூட
தயங்காமல்,
என் கண்ணங்களை
ஈரமாக்குகிறதே...!!!

சிதறாத சிந்தனைகூட
சிதறுகிறது...
என்னால் ஆன
உன் இரணங்களைக் கண்டு...

என் வார்த்தைகளே
என் மனதைமட்டுமல்லாமல்
வார்தைகளையும் தீராத
காயத்திற்குள்ளானதை
எப்படி புறிய வைப்பேன்?...

சொல்லத் துடிக்கும்
உதடுகளை
ஏதொ ஒன்று தடுக்கிறது...

தினம் தினம் ஒரு புதிரோடு
நம் விளையாட்டு,
வலியோடு சந்தோஷம்தான்
வலி மனதிற்கும்
சந்தோஷம் உதட்டிற்கும்...

புரண்டது உனது வாழ்க்கை
மட்டுமல்ல
என்னுடையதும்தான்...

யாருக்கும் திறவாத உன் மனக்கதவு
எனக்கென வரவேற்றதில்
நான் அதிர்ஷ்டசாலியே!
இருப்பினும்,
உள்நுழைய தகுதியில்லா
துர்ரதிஷ்டசாலிதான்.....♥   




No comments:

Post a Comment