Saturday, February 12, 2011

வருவாயென!!!

நான் நானாயிருக்க 
சுயனலமுல்லவளல்ல...!!!
மாய உலகத்திலும்,
உண்மையில்லா பொய்களுக்குள்ளும்
மாற்றமில்லா
நிறந்தரத்தைத் தேடுகிறேன்...!!!

வழி காட்டவும்,
வழி துணையாகவும்
முன்னிருக்காமல்
பின் தொடரும்
உன் நிழல் தேவையில்லை...
குழந்தைக்குக் கைகொடுத்துத்
துணையாக ஒரு தாய்
போதுமே...
வழிகாட்டத் தோள்கொடுக்கும்
ஒரு நட்பு போதுமே!!!

நான் பின் தொடரும்
நிழலாக விரும்பவில்லை...
தோள்கொடுக்கும் தோழியாய்
மட்டுமே போதும்...!!!

மணல்வீடு என்றபின்னும்
நட்புக்கோட்டை
கட்டுகிறேன்...
அலைவந்து அள்ளுவதற்குள்
வருவாயென!!! 




No comments:

Post a Comment