Monday, June 27, 2011

அறியாமை?????


தொலைவில்
இருக்கும் நிலவுகூட
உனக்கு
அருகில் தெரிந்தும்
என்னுள்
நானாகவே மாறிய
உன் நினைவுகள்
தெரியாமட்போனதென்னவோ
வியப்புதான்.....

Tuesday, June 7, 2011

இனிமையான தனிப்பு...


உன் தனிமையும்
நானாயிருக்க
தவமிருந்தேன்,
பலனாயிற்று...

இங்கு நீயில்லா
என் பொழுது
தனித்து தனிமையிலென
கலங்கிய வேலையில்...


இதமாய் அணைத்து 
நெற்றியில் 
இதழ் பதித்தன 
உன் நினைவுகள்.....


தலைவனோடும்
அவன் நேசத்தோடும்
தனிமையில்
லயித்திருந்த நான்
இனிவரும் பொழுதுகளில்
அதே நேசத்தோடு,
நாங்கள் மட்டும் 

எங்கள் இனிமையான தனிமையில்............

Thursday, June 2, 2011

தாயுமாகிறேன்...!!!















கண்ணிமைக்கும்
நொடிகளைக் கூட
தவிர்க்கிறேன்...
நீ
என் பார்வையிலிருந்து
விடுபடாமலிருக்க...
உள் இழுக்கும்
சுவாசமாய்
நீயாயிருக்க,
உருவம் மட்டும்
நானாகிறேன்!!!
என் உயிரே,
உன்னை
சுமப்பதினால் நான்
தாயுமாகிறேன்...
உன்னோடு வாழ்வதற்கு
முன்பே...!!!

Tuesday, May 10, 2011

நீயே!!!


















காதல் உறவுக்குமேல்
உறிமையானபின்
யோசனைக்கென்னெ வேலை?

அன்று.
பட படத்த இதழ்களே
இன்று,
உன்னை திக்கு முக்காட
வைத்தது...

காரணி நானல்ல!!!

என் வெட்கங்களே
வெட்கப்பட்டு
திசையறியா
ஓடி ஒளிந்து
போயிற்றே!!!

காரணி நானல்ல!!!

வேகத்தின் தித்திப்புக் கண்டு
என் மழையில் நீயும்,
உன் மழையில் நானும்,
நம் மழையில் நாமும்...

அடடா...
நினைக்கையில்
குடைக்குள் என்றும்
நம் காதல் மழை
என் அன்பே...!!!

Saturday, April 23, 2011

வசந்தம்!!!













வேனிற்காலம் இளவேனிலாய்
மாறியக்
காண்புக்கண்டேன்!!!
இளவேனிலிலும் எளிதாய்
உதிர்தலைக் கண்டேன்!!!
எனினும்,
தலைவன்
வருகையால்
பருவம் ஒன்றே!!!
வசந்தம்...வசந்தமே!!!

Thursday, April 21, 2011

கனா...












எங்கோ ஒரு மழைத்துளி
எனக்கென சிந்துவதுபோல்
ஒரு பிரம்மை...

எங்கோ ஒரு தூரல்
 எனக்காகவே பூமியைத்
தொட்டு மடிவதாய்
ஒரு பிரம்மை...

இன்னும், எங்கோ
ஓர் இதயம் எனக்காய்
துடிப்பதாய்
ஒரு பிரம்மை...

எதோ ஒரு நிழல்
என்னை பின் தொடர்ந்து
வருவதாய் ஒரு கனா...

இன்னனும்,
நான் மட்டும் நிஜத்தில்...
அதே பிரம்மையோடு...


விழித்து எழுந்தேன்
அந்த நிஜமும்
வெரும் கனாவோடு!!!



Monday, February 21, 2011


எத்தனை கர்வம்
உனக்குள்?
எட்டா உயரத்தில்
ஊற்றாய் இருப்பதாலா? ...
சின்னஞ்சிறு
நுண்ணுயிர்களுக்குள்ளும்
வண்ணங்களாய் இருப்பதாலா?...

படைப்பாலியில்லா
படைப்பென்றே
பெருமிதக்கண்ணியே,
நீலவானமாய் கடலோடு
காதல் உண்டோ?...

மிகையில்லா அழகால்
குறையாத கர்வம்
கொண்டாளே,
உன்னழகு மேன்மையாவதே
என்னவன் உன்னை ரசிப்பதால்தான்<3<3<3


Wednesday, February 16, 2011

உன் சுவாசமாய் நான்...














என்
உயிர்பிரியும்
வேளையில்...
ஒரே ஒரு
நொடிகொடு
எனக்காக
உன்
மார்சாய்ந்துகொள்ள...
நெடுநாள்
ஆசைக்காக
மட்டும் அல்ல
என்னுயிர்
உன்னிதயத்தோடு
சங்கமாவதற்கும்தான்...
அத்தருணம்
மலரின் வாசத்தைபோல்
உன்னுயிரோடு
என்னுயிர்
கலந்திருபேன்
உன் சுவாசத்தின்
ஒரு பாகமாய்...

Saturday, February 12, 2011





குளுமையில் 
இமைகள்
கனக்கின்றன
தூக்கத்தால்
அல்ல
துக்கத்தால்!!
உறிமையுண்டு
காதலுமில்லை,
கண்ணீர் துடைக்க
தோளுண்டு
நட்புமில்லை...
நன்னாள் தேடுகிறேன்....
பெயரில்லா நம் உறவிற்கு
பெயர் சூட்ட!!




துர்ரதிஷ்டசாலிதான்!!!

சொல்ல முடியா
வார்த்தைகள் கோடி,
பேச மொழியில்லா
ஊமையப்போல்..!!!

உன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு
தயங்கிய கண்ணீர்கூட
தயங்காமல்,
என் கண்ணங்களை
ஈரமாக்குகிறதே...!!!

சிதறாத சிந்தனைகூட
சிதறுகிறது...
என்னால் ஆன
உன் இரணங்களைக் கண்டு...

என் வார்த்தைகளே
என் மனதைமட்டுமல்லாமல்
வார்தைகளையும் தீராத
காயத்திற்குள்ளானதை
எப்படி புறிய வைப்பேன்?...

சொல்லத் துடிக்கும்
உதடுகளை
ஏதொ ஒன்று தடுக்கிறது...

தினம் தினம் ஒரு புதிரோடு
நம் விளையாட்டு,
வலியோடு சந்தோஷம்தான்
வலி மனதிற்கும்
சந்தோஷம் உதட்டிற்கும்...

புரண்டது உனது வாழ்க்கை
மட்டுமல்ல
என்னுடையதும்தான்...

யாருக்கும் திறவாத உன் மனக்கதவு
எனக்கென வரவேற்றதில்
நான் அதிர்ஷ்டசாலியே!
இருப்பினும்,
உள்நுழைய தகுதியில்லா
துர்ரதிஷ்டசாலிதான்.....♥   




நீ + நான்...

நீ எனைவிட்டு
நீண்டதூரம் போவாதையே மனம் விரும்புகிறது...
நீண்ட இடைவெளியால்
நம்மிரு இதயங்களும்
நெருக்கமாகின்றதை உணர்கிறேன்!!!
நீ தூரமாகவே போய்விடு...
நீ சிந்தும் கவிதைகளுக்கெல்லாம்...
நான் கவியாகிறேன்
நம் நீண்ட இடைவெளியால்♥♥♥

வருவாயென!!!

நான் நானாயிருக்க 
சுயனலமுல்லவளல்ல...!!!
மாய உலகத்திலும்,
உண்மையில்லா பொய்களுக்குள்ளும்
மாற்றமில்லா
நிறந்தரத்தைத் தேடுகிறேன்...!!!

வழி காட்டவும்,
வழி துணையாகவும்
முன்னிருக்காமல்
பின் தொடரும்
உன் நிழல் தேவையில்லை...
குழந்தைக்குக் கைகொடுத்துத்
துணையாக ஒரு தாய்
போதுமே...
வழிகாட்டத் தோள்கொடுக்கும்
ஒரு நட்பு போதுமே!!!

நான் பின் தொடரும்
நிழலாக விரும்பவில்லை...
தோள்கொடுக்கும் தோழியாய்
மட்டுமே போதும்...!!!

மணல்வீடு என்றபின்னும்
நட்புக்கோட்டை
கட்டுகிறேன்...
அலைவந்து அள்ளுவதற்குள்
வருவாயென!!! 




பெண்ணுக்கே உரிய
மொளனத்தை நான் மட்டும்
துறந்து விட நான் விதிவிளக்கல்லவே...!
இலகுவாய் திறக்க
இது மணற்கதவல்ல,
என் மனக்கதவு...!!!

ம்ம்ம்....
கறைப்போர் கறைக்கையில்
கறையத்தானே வேண்டும்...!

என் காலம்
எனக்கு பதில் சொல்லுகையில்,
நானும் வருவேன் என்
மொளனத்தைத் துறந்து
பதிலோடு...........♥







நீ மட்டும்.....

கை கோர்த்து நடக்க...
உன் கைகள் 
என்னருகில் இருத்தல் 
வேண்டும்...
தோள் சாய்ந்துக்கொள்ள...
உன் தோள்கள் 

எப்போதும் 
வேண்டும்...
என் கண்ணீரைத் துடைக்க...
உன் ஈடில்லா 

அன்பு வேண்டும்...
என் வாழ்வை 

முழ்மையாக்க
உன் காதல் வேண்டும்...
என் ஆயுள்வரை நீ,
நீ மட்டுமே 

என்னருகில் 
எல்லாமுமாய் வேண்டும்...

Saturday, February 5, 2011





















உன் தேசத்தோடு
என்னையும்
காதலிக்கும்
உனக்காக
மனதை மட்டும்
அனுப்பி வைக்கிறேன்
கடல்தாண்டி...

கடல்தாண்ட என்னுகையில்,
என் கடமைகளோ
நானில்லாமல்
பரிதவித்து போகின்றனவே!!!

இது சாத்தியமா
எனும்
கேள்விக்கு,
நான் தரும் பதில்
இல்லையென்று தெரிந்தும்...

உன் அன்புகொண்ட நட்புகாக
என்னையறியாமல்
கடல்தாண்டி விட்டதே
என் அரியாமனது!!!

ஒத்த சொல்லெனும்போது
பூரித்த மனம்
அதை
இருவிழியாக
பிரிக்கும்பொழுது
சற்று
குழம்பவே செய்கிறது...

இருப்பினும்,

இரு விழியை
ஒரு சொல்லாக
எண்ணி
என் நினைவுகள்
என்றும்
உன்னோடு
கைக்கோர்த்து
ஒரு வழி நடக்கிறதை
நான்
உணரத்தான்
செய்கிறேன்...

உனக்கு?............

Monday, January 31, 2011

இறப்பு...



















ஆறும் அறியா,
அறுபதும் அறியா,

மண்டியிட்டு மன்றாடியும்
மலைபோல் கடமையில்...

எக்காலத்திலும் வெற்றியை
மட்டும் தனக்கு கொண்டு
தோல்வியும்,இழப்பையும்
தர்மம் செய்யும்
வள்ளலாய்...

ஈராயிரம் ஆண்டுகள்
முதுமை,
ஆனாலும்
தினம் தினம்
இறக்கமற்ற கொடூர
அவதாரத்தோடு...

யார் அனுமதியின்றி
உடலயும் உயிரயும்
பாகப்பிரிவினை
செய்வதில்
திறமைசாலி!!!

கொடுயவர்களோடு
நல்லவர்களையும்
விழுங்குபவனாய்...
அதில் சிலருக்கு
தீபாவளியாக...
சிலருக்கு
அமாவாசை இருளாக...!!!

Friday, January 28, 2011

..ஞாபகம்!!!
















இயற்கையவளை 
இரசித்தேன்...
உன்னையும் 
மறவாமல்.....!


Thursday, January 27, 2011

குழப்பமில்லை!!!













கல்லெறிந்த
நீராக
இருந்தவள்தான்...
எப்போதோ
தெளிந்த நீராகிவிட்டேன்!

குழப்பமுமல்ல,
தயக்கமுமல்ல,

நீலவானில்
வெண்ணிலவாய்
நான்,

தொலைதூரத்திலிருந்து...
என் ஒற்றை
வார்த்தைக்காக
நீயும்..........

உன் ஒற்றை
வார்த்தைக்காக
நானும்....................

காதலுக்காக அல்ல
என்றென்றும்
நண்கர்களாய்...

குழப்பமில்லாமல் !!!

Wednesday, January 26, 2011

ஆயுள்வரை!!!













எழுத சொற்களின்றி
வார்த்தைகளைத் தொலைத்துவிட்டேன்...
என்னெவென்று எழுத,
ஏதென்று சொல்ல...

காரணங்கள் தெரியாமல்
எட்டு திக்கும்
தேடுகிறேன்...

புரியாத புதிராய் 
நானானேன்...
தெளிவாக தெளிவில்லாத பேதையானேன்!
நீ ஒருவனே காரணம்!!

மௌனத்தைக் கலைக்க 
நாடகம்...
வெற்றியோ,
தோல்வியோ,
நம்மிருவருக்கும்தான்...!

இனி ஒரு திங்கள்வரை...
பார்க்கலாம்...
நினைவில்கொள்,
நெருக்கத்தைவிட 
தள்ளியுருப்பதே சிக்கல்தான்
என் நினைவில் நீயும்,
உன் நினைவில் நானும்...

இருப்பினும் 
வேண்டும் 
உன் நட்பு 
என் ஆயுள்வரை!!!